For Daily Alerts
Just In
தணிக்கை அதிகாரி அறிக்கை-ராசாவை நீக்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை
டெல்லி: தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
அக் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.90 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது.
ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம், நிதி அமைச்சகங்களின் அறிவுரைகளையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் புறக்கணித்தது என்று கூறி வந்தோம். அதையே மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அமைச்சர் ராசாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.
Comments
Story first published: Saturday, November 6, 2010, 10:29 [IST]