கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கிலிருந்து 3 அதிகாரிகளை விடுவித்தது செல்லும்-உச்ச நீதிமன்றம்
டெல்லி: கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் இருந்து 3 அதிகாரிகளை உயர் நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்று உச்ச நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் அப்போதைய கும்பகோணம் தாசில்தார் பரமசிவம், தஞ்சை மாவட்ட பள்ளிக் கல்வி முதன்மை அதிகாரி பழனிச்சாமி, ஆரம்பக் கல்வித்துறை அதிகாரி கண்ணன் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அம்மூவரும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். பின்னர் அவர்கள் மூவரையும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தீவிபத்தில் தனது 2 பிள்ளைகளையும் பறிகொடுத்த இன்பராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் மூறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது இன்பராஜின் வழக்கறிஞர் ஆஜராகி பள்ளி தீவிபத்திற்கு இந்த 3 அதிகாரிகளும் தான் காரணம் என்பதால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விபத்து பற்றி விசாரிக்க அமைத்த நீதிபதி சம்பத் கம்ஷன் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று தெரிவித்தது. இதயைடுத்து தான் உயர் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications