For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக அளவு அந்நிய முதலீடுகள் வேண்டும்! - சீனா

By Chakra
Google Oneindia Tamil News

China
பெய்ஜிங்: வெளிநாட்டவர்கள் சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் டிரில்லியன் டாலர் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் மேம்பட வழிவகுத்துள்ளது.

"நியாயமான சந்தை முறையை உருவாக்கி அந்நிய முதலீடுகளை அதிக அளவில் கவரத் திட்டமிட்டுள்ளதாக," பெய்ஜிங்கில் நடந்த சி.இ.ஓ.க்களின் கூட்டத்தில் துணை பிரதமர் ஜாங் டெஜாங் தெரிவித்தார்.

பன்னாட்டு முதலீடு எப்பொழுதும் உலக பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை உயர்த்தும் உந்து சக்தியாகத் திகழ்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவில் இன்றைய தேதிக்கு 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்து கிடக்கிறது. 7 லட்சம் வெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கே கடை விரித்துள்ளன. 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் உள்ளவற்றில் 470 நிறுவனங்கள் சீனாவில்தான் உள்ளன.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே சீனாவின் ஏற்றுமதி 1.1 ட்ரில்லி்யன் டாலரைத் தாண்டிவிட்டது. 45 மில்லியன் வேலைவாய்ப்புகளைத் தரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியில் பாதியளவுக்கு பங்களித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X