Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேமானந்தா கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் பிரேமானந்தா இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர் கவலைக்கிடமாக உள்ளார்.

பல்வேறு நோய் இருப்பதால், சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கி கிசிச்சை பெற்று, கடந்த 8ம் தேதி சிறைக்கு திரும்பினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரேமானந்தாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரேமானந்தாவிற்கு மூச்சு திணறல் மற்றும் கால் வீக்கம் உள்ளதால் தொடர்ந்து 15 நாள் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தினர்.

அதன்பேரில் பிரேமானந்தா கடலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பிரேமானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+