For Daily Alerts
Just In
குழந்தைகள் தினத்தில் துயரம்-கொதிக்கும் பாலில் விழுந்து குழந்தை பலி
மால்டா: மேற்கு வங்கத்தில் கொதிக்கும் பால் பாத்திரத்தில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது ஆக்ரா-ஹரிஷ்சந்திரபூர். இந்த கிராமம் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ளது.
குழந்தைகள் தினமான நேற்று இங்குள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தேப் கோஸ் கொதிக்கும் பால் பாத்திரத்தில் தவறி விழுந்தது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் குழந்தை தேப் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Monday, November 15, 2010, 17:46 [IST]