தமிழர் சாதிகளை மோதவிட்டு பார்ப்பது தான் திராவிட அரசியல்: அரிமாவளவன்
கோவில்பட்டி: தமிழகத்தில் உள்ள சாதிகளை ஒன்றோடு ஒன்று மோத விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் திராவிட அரசியல் என்று தமிழர் களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் சாடியுள்ளார்.
மள்ளர் மீட்பு களத்தின் கொள்கை விளக்க புத்தக வெளியீட்டுவிழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழர் களத்தின் மாநில பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது,
நமது தமிழ் சாதிகள் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிட வழிவகை செய்து வருவது தான் திராவிட அரசியல். இந்த கொடுமை காலம் காலமாக நடந்து வருகிறது.
அதனால் தான் தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும்படி செய்துவிட்டனர். களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல. தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்கவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் வழி வகை செய்ய வேண்டும்.
நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாகக் கருதாமல் வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம். அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம்.
நமது பொதுவான பிரச்சினைகளைத் தீர்க்க களம் அமைத்துவிட்டதால் செந்தில் மள்ளரும், அரிமாவளவனும் மட்டுமே போதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என எண்ண வேண்டாம்.
ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திற்கு எதிராக கருத்துகளை உள்வாங்கி அதனால் நாம் இழந்ததைப் பற்றியும், இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
லச்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல், தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணி கட்சியையும் தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்ற ஒவ்வொரு தமிழரும் பாடுபட வேண்டும்.
நமக்குள் இருக்கும் அக முரண்களைக் களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம், இருப்பதை காப்போம், இழந்ததை மீட்போம் என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications