For Daily Alerts
Just In
தீவிபத்தில் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
காசியாபாத்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மூச்சுத் திணறி உயிர் இழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லோனியில் உள்ள குலாப் வாடிகாவில் இருக்கும் ஒரு வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீ பிடித்த வீட்டில் இருந்தவர்களை குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். புபேந்தர் ஜெயின் (55), குசம் (52), மேகா (22), ருச்சிகா (28), ஹரிநீத் (8) ஆகியோர் தான் இந்த விபத்தில் உயிர் இழந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
Comments
Story first published: Monday, November 15, 2010, 14:55 [IST]