For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் கட்டடம் தீப்பிடித்து 53 பேர் பலி!

Google Oneindia Tamil News

China Fire
ஷாங்காய்: சீனாவில் அடுக்குமாடிக் கட்டடம் தீப்பிடித்ததில் 53 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 28 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ் பகுதியில் வணிக வளாகமும், மேல் பகுதியில் குடியிருப்புகளும் இருந்தன. இவற்றில் புனர மைப்பு பணிகள் நடந்து வந்தன.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இதில் சிக்கி 53 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன.

கட்டிடத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்த ஏராளமான பொதுமக்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று அபாயக்குரல் எழுப்பினார்கள்.

அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தீப்பிடித்த கட்டிடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதற்குள் ஏராளமானவர்கள் இறந்து கிடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X