ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ராசா வெற்றி வீரராக வருவார்-வீரமணி
சென்னை: ராசா வெற்றி வீரராகி ராஜநடை போட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
இதுதொடர்பாக வீரமணி விடுத்துள்ள அறிக்கை:
1999-ம் ஆண்டு முதலே இருந்த நடைமுறையைத்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலும் ஆ. ராசா பின்பற்றினார். கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவைத் தத்துவப்படி, அவர் மட்டும்தான் குற்றம் இழைத்தவரா- குற்றம் என்று ஒன்று நடந்திருக்குமானால்-அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடு செயற்பாடு என்று எதிர்க்கட்சிகள் மேலும் சில காவுகளை'க் கேட்கமாட்டார்களா என்ற கேள்வி, மில்லியன் டாலர் கேள்வி'யாகக் கிளம்பாதா?
இதுவரை உலகம் கேள்விப்படாத ஒரு விசித்திரம்! ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அது பற்றிய விமர்சனம், பதவி விடுவிப்பு என்றால் அதைவிட வேறு விசித்திரம் உண்டா?
இதனை அரசியலால் - நாளைக்கொரு கூட்டணி, ஆளுக்கொரு வேஷம் போடுபவர்களால் வீழ்த்தி விட முடியாது. அறத்திற்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் அளக்க முடியாதது தானாம். உள்ள ஆழம் கணக்கிட முடியாதுதான்.
ராசா வெற்றி வீரராகி ராஜநடை போட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது. பதவி அரசியல் வரலாறு தெரியாதவர்கள் அல்லர் மக்கள் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications