இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது-இளங்கோவன்
விழுப்புரம்: எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
விழுப்புரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி ஆகிவிட முடியாது. அவர் குற்றவாளி அல்ல. இதைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்குகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.
கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் எதியூரப்பா தலைமையிலான அரசு சுமார் 6 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழலில் ஈடுபட்டுள்ளது. அதனை கணக்கு பொதுக்குழு உறுப்பினரான உள்ள பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியால் தடுகக முடியவில்லை. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் நேர்மையற்ற செயலில் ஈடுபடுன்கிறன என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கூட்டணி பற்றி பேச நேரம் இருக்கிறது. ஆகையால் இப்போது கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications