எனக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பில்லை-ராஜாவின் தனிச் செயலாளர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னை யாரும் விசாரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜாவின் தனிச் செயலாளரான ஆர்.கே.சந்தோலியா.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக என்ன எந்த புலனாய்வு அமைப்பும் விசாரிக்கவில்லை. யாராவது என்னை விசாரித்தால் உண்மையைச் சொல்வேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
சில முக்கிய ஆவணங்கள் எனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது முற்றிலும் தவறான தகவல்.
கொள்கை உருவாக்கலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு தனிச் செயலாளரின் வேலை என்னவோ அதை மட்டுமே நான் செய்தேன்.
எனக்கு விதிமுறையை மீறி பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றார் சந்தோலியா.












Click it and Unblock the Notifications