சோனியா-ராகுல் விரும்பும் காங்கிரசை உருவாக்குவோம்: தங்கபாலு
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 93-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் யமுனை நதிக்கரையில் உள்ள அவரின் நினைவிடமான சக்தி ஸ்தல்லில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் தவிர துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் ஆகியோரும் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தங்கபாலு பேசுகையில்,
இந்த நாளில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம். இந்தியாவின் வளர்ச்சிக்கு காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா ஆகியோரே காரணம்.
மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் உணவு திட்டம் நிறைவேறியதும் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு சோனியா, ராகுல் விரும்பும் காங்கிரசை தமிழகத்தில் உருவாக்குவோம் என்றார்.
முன்னதாக தங்கபாலு யானைகவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.












Click it and Unblock the Notifications