தமிழர்களுக்கு செய்து வரும் நிவாரணப் பணிகளை குறைக்குமாறு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை உத்தரவு
கொழும்பு: தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வட இலங்கையில் செய்து வரும் நிவாரணப் பணிகள், மனிதாபிமானப் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது பணியாளர்களை வெளியேற்றுமாறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு திடீர் உத்தரவு போட்டுள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு இலங்கை அரசு நெருக்கடி கொடுத்ததால் கிழக்கு மாகாணத்தில் வைத்திருந்த தங்களது அலுவலகத்தை காலி செய்ய நேரிட்டது செஞ்சிலுவைச் சங்கம். தற்போது வட இலங்கையிலும், பணிகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு நெருக்கஆரம்பித்திருப்பதால் அங்கிருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் அகல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசி விஜரத்னே கூறுகையில், யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள அலுவலகங்களைக் காலி செய்து விட்டு கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுமாறு எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசவுள்ளோம் என்றார் அவர்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதிலும், இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை மறுகுடியேற்றம் செய்வதிலும் இலங்கை அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பலமான குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்து வரும் உதவிகளையும் நிறுத்த தற்போது இலங்கை அரசு இறங்கியுள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications