வந்தது கார்த்திகை மாதம்-காற்று வாங்கும் அசைவ ஹோட்டல்கள்
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அசைவ ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் இன்றி காற்று வாங்கியபடி உள்ளது. கறி கிடைக்காதால் அல்ல, கார்ததிகை மாதம் பிறந்ததால்.
கரூர் மாவட்த்தில் சாலையோரத்தில் பஞ்சாபி தாபா என்ற பெரியலும், மற்றும் அசைவ பிரியர்களுக்காக தலைப்பாகட்டு பிரியாணி என்ற பெயரிலும் பல அசைவ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஹோட்டல்களுக்கு தினசரி வரும் வாடிக்கையாளர்கள் வராததால் காற்று வாங்கியபடி இருந்தன.
கார்த்திகை மாதத்தில் பலர் அய்யப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். மேலும், நேற்று கார்த்திகை தீபம் என்பதால் பலர் சைவத்திற்கு மாறி இருந்தனர்.
இதனால் ஹோட்டல்களில் வைக்கப்பட்டிருந்த ஆடு, கோழி, நண்டு, இறால், வான்கோழி என பல அசைவ உணவு வகைகள் போணியாகாமல் கடைக்காரர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தன.
இது குறித்து ஒரு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, அய்யப்ப சாமிக்கு பலர் இந்த கார்த்திகை மாத்தில் தான் மாலை போடுவார்கள். அதனால் வியாபாரம் குறைவாக இருக்கும். மேலும், இன்று கார்த்திகை தீபம் என்பதால் பலரும் வரவில்லை. இதனால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்றார்.
இதே போன்று பல மாவட்டங்களிலும் அசைவ ஹோட்டல்களில் எதிர்பார்த்தபடி வருமானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications