பாக்.கில் நடக்கும் தீவிரவாத செயல்களில் இந்தியாவுக்கு பங்கில்லை: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
கராச்சி: பாகிஸ்தானில் இந்தியா எந்த தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸதானியர்கள் தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் குறைகூறும் முன் முதலில் எங்கள் நாட்டை ஒழுங்குபடுத்த வேண்டும்.
உள்நாட்டு மக்களின் ஆதரவின்றி தீவிரவாதிகளால் எதையும் செய்ய முடியாது. எனவே, முதலில் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான், அல் கொய்தா மற்றும் லஷ்கர்-இ-ஜங்க்வி ஆகிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யத் திட்டமிட்டனர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications