பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது

இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 5 நகரங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதையடுத்து கடன் மோசடியில் ஈடுபட்ட எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர்கள், பஞ்சாப் நேசனல் வங்கியின் தலைமை பொது மேலாளர் உள்பட 8 பொதுத்துறை வங்கிகளி்ன் அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.
வீட்டுக் கடன்கள் வழங்க லஞ்சம் வாங்கியது உள்பட பல்வேறு ஊழல்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் பிரிவின் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கிய ரியல் எஸ்டேட் புள்ளியும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது.
மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே எல்ஐசியில் நடந்த பல கோடி வீட்டுக் கடன் ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியானபடி இருந்தன. இந் நிலையில் ரகசிய விசாரணைகளை நடத்தி வந்த சிபிஐ நேற்று சில வங்கிக் கிளைகள், எல்ஐசி அலுவலங்களிலும் ரெய்ட் நடத்தியது.
இந் நிலையில் இன்று அதிரடியாக இந்த அதிகாரிகளை கைது செய்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து போலிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, இல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் பொய்யான நிலங்களின் பேரில் பல கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளனர் இந்த அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழலின் அளவு மிக அதிகம் என்றும், இதனால் நியாயமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் பல நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஊழலில் கொள்ளை போயிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக மேலும் ஏராளமான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications