சொத்து குவிப்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெ.வின் அப்பீல் மனு தள்ளுபடி
பெங்களூர்: தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்தது தொடர்பான வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. ஆனால், இந்த மொழிபெயர்ப்பில் நிறைய பிழைகள் இருப்பதாகவும், எனவே அதை ரத்து செய்துவிட்டு நீதிமன்ற மேற்பார்வையில் மீண்டும் புதிதாக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி நீதிபதி சுபாஷ் ஆதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications