For Daily Alerts
Just In
உதகை ராணுவ வெடி மருந்து ஆலையில் பெரும் விபத்து-5 பேர் பலி
ஊட்டி: உதகை அருகே பாதுகாப்புத்துறையின் வெடி மருந்து தொழிற்சாலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் பலியாகிவிட்டனர்.
அரவங்காடு அருகே உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான வெடி மருந்து ஆலையில் இன்று காலை ரசாயண சிலிண்டர்கள் வெடித்தது.
இதையடுத்து வெடி மருந்துகளும் தீப் பற்றிக் கொண்டதில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 பணியாளர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.
வெடி விபத்தின்போது ஏற்பட்ட பயங்கர அதிர்வால் சுற்றுப் பகுதி வீடுகளி்ன் ஜன்னல் கண்ணாடிகளும் சிதறின.
Comments
Story first published: Thursday, November 25, 2010, 17:35 [IST]