புதுவையில் ஒரு வார கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் ஒருவாரமாகத் தொடர்ந்து மழைபெய்து வருகின்றது. இரவு பெய்த மழையால் புதுவையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாதபடி செய்துவிட்டது.

குறிப்பாக கிருஷ்ணா நகர், சூரியகாந்திநகர், எழில்நகர், வசந்த் நகர்,ரெயின்போநகர்,வெங்கட்டா நகர் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாததால் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

மாடி வீடுகளில் உள்ள மக்கள் கீழே இறங்காமல் உள்ளனர். பால், உணவுப்பொருட்கள் இல்லாமல் குழந்தைகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.

கிருஷ்ணாநகர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக பாதையைத் தோண்டி ஓராண்டாகியும் இன்னும் பாலம் கட்டாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது.

பாலம் கட்ட மண் தோண்டி போடப்பட்டுள்ளதால் தண்ணீர் ஓடவழியில்லை. மேலும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை அகற்றும் எந்த நடவடிக்கையும் அரசு செய்யவில்லை. அரசு மக்களுக்கு அவசர காலத்தில் உதவுவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குறைந்த அளவு தேங்கியுள்ள தண்ணீரை இறைத்திருக்கலாம். பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

கழிவுநீர் குடிநீரில் கலந்துவருகின்றது. தூய்மையான குடிநீர் இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+