எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தின் நோக்கம் அம்பலமாகி விட்டது-நெடுமாறன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எஸ். பெய்ரிஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதன் மூலம் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.
காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் சாம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துத்தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.
மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார உதவிகள் மூலம் சீனா பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications