பிளஸ் 2 போலிச் சான்றிதழ் கொடுத்த நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி டிஸ்மிஸ்
நெல்லை: போலிச் சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர்ந்த நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள மேலச்செவலையைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகள் சோனா. பிளஸ்டூ முடித்த இவர் இந்தாண்டு சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங்கில் கலந்து கொண்டார். இவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது.
இங்கு படித்து வந்த இவர் முதலாமாண்டுக்கான தேர்வையும் எழுதினார். ஆனால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திடம் கேட்டபோது மாணவி சோனா கவுன்சிலிங்கின்போது போலி பிளஸ் டூ மார்க் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசின் தேர்வுத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மாணவி சோனைவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
மேலும் போலிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்கல்வி படிப்புகளில் மாணவ-மாணவிகள் சிலர் போலிச் சான்றிதழ்கள் தயாரித்து கல்லூரியில் சேர்ந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போலிச் சான்றிதழ் கொடுத்த மாணவ, மாணவிகளை கைது செய்தனர்.
இந்நிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரும் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications