குண்டு வைத்து ராஜசேகர ரெட்டியைக் கொன்றுவிட்டார்கள்!-ரோஜா அதிரடி
ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இப்போது சேருகிறார் நடிகை ரோஜா. இவர் தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராஜசேகர ரெட்டி மரணத்துக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
ஹெலிகாப்டர் விபத்து ஒரு சதி...
புதுக்கட்சியில் இணையும் பரபரப்புடன் ஹைதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்தார் ரோஜா. அவர் கூறுகையில், "ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார். அதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. ஹெலிகாப்டர் மாயமானது பற்றி மத்திய அரசுக்கு தெரிவித்தும் கூட அவரை மீட்க உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செயற்கை கோள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை சில மணி நேரங்களில் கண்டு பிடித்துவிட முடிந்திருக்கும்.
ஆனால் அவரது உடலை மீட்க ஒன்றரை நாள் வரை ஆனது. எதற்காக தாமதப் படுத்தினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஹெலிகாப்டர் மரத்தில் மோதினால் சில பாகங்கள் தனித்தனியாக கிடந்திருக்கும். ஆனால் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால்தான் இந்த மாதிரி துண்டு துண்டாக சிதறும். இதுபற்றியும் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.
ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டியில் பதிவான பேச்சு விவரத்தையும் சி.பி.ஐ. வெளியிட மறுத்துவிட்டது. அந்த பேச்சு விபரம் இருந்தால் ஓரளவு உண்மைகள் தெரியவரும்.
ஆந்திர அரசிடம் புதிய ஹெலிகாப்டர் இருந்தும் ராஜசேகர ரெட்டிக்கு பழைய ஹெலிகாப்டரை கொடுத்தது ஏன்? அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சி.பி.ஐ. போலீசார் முழு அளவில் விசாரிக்கவில்லை. கண்துடைப்புக்காக விசாரித்தது போல் தெரிகிறது. ராஜசேகர ரெட்டி சாவில் யாரை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பதும் மர்மமாகவே உள்ளது.
இதனால்தான் ஜெகன்மோகன் ரெட்டியும் தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானால் ராஜசேகர ரெட்டி சாவில் உள்ள மர்மம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடித்து விடுவாரோ என்று காங்கிரஸ் பயப்படுகிறது.
திறமையில்லாத ரோசய்யா, கிரண்குமார் ரெட்டி...
இதனால்தான் மக்கள் செல்வாக்கு மிகுந்த அவருக்கு பதவி தராமல் ரோசய்யா, கிரண்குமார் ரெட்டி போன்ற திறமை இல்லாதவர்களை முதல்வர் பதவியில் அமர்த்துகிறார்கள்.
ஆந்திராவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மேலிடம் தெலுங்கானா பிரச்சினையை வளரவிட்டது. ஹைதராபாத்தில் கலவரம் மூண்டபோது அதைக் கட்டுப்படுத்தாமல் நகரத்தை சீர் குலைய செய்தனர். தெலுங்கானா- ஐக்கிய ஆந்திரா என்ற பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் துணை போனது.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகி இருந்தால் ஆந்திராவில் எந்தவித கலவரமும் ஏற்பட்டிருக்காது. தெலுங்கானா குறித்த கலவரங்களும் ஏற்பட்டிருக்காது..." என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!













Click it and Unblock the Notifications