மீண்டும் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்-2009ல் 13 பேருக்கு வேலை கிடைத்தது

டெல்லி: இந்தியாவில் மீண்டும் வேலைவாய்ப்புகள் மலர்ச்சி பெற தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் 13 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலானோருக்கு ஐடி மற்றும் பிபிஓக்களில் வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் வேலைவாய்ப்புகள் நல்ல உயர்வைக் கண்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓக்களில் வேலைக்கு ஆளெடுப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 12.96 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இவர்கள் வேலை பெற்றுள்ளனர்.
ஐடி-பிபிஓ பிரிவில் மட்டும் 8.54 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஜவுளித்துறையில் 1.52 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
அடுத்து மெட்டல்கள் பிரிவில் 1.37 லட்சம் பேரும், ஆட்டோமொபைல் பிரிவில் 1.10 லட்சம் பேருக்கும், ஜெம்ஸ் ஜூவல்லரி பிரிவில் 93 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.
அதேசமயம் கடந்த 2008ம் ஆண்டு 4.92 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் வேலைக்கு ஆளெடுப்பது மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications