நாடாளுமன்றம் 18வது நாளாக முடங்கியது
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இன்று நாடாளுமன்றம் 18வது நாளாக முடங்கியது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன. இன்று நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இது தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரம். இந்தத் தொடர் தொடங்கியதில் இருந்தே 2ஜி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதையடுத்து கடைசி வாரத்திலாவது சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மீராகுமார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை எதிர்கட்சிகள் கவனிப்பதாய் இல்லை. அவர்கள் தொடர்ந்து அமளியி்ல ஈடுபட்டதால் நேற்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் அவை கூடியதும் எதிர்கட்சிகள் வழக்கம் போல் கோஷங்கள் எழுப்பி அவையை நடத்தவிடாமல் செய்தனர். இதையடுத்து அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுக்க ஒத்திவைப்பதாக மீராகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications