ராசாவின் நண்பர், உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினரும் சோதனை!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவிடமும், ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணா நடத்தினர்.
சென்னை போயஸ் கார்டன் அருகே உள்ள வெள்ளாள தேனாம்பேட்டை 5வது குறுக்குத் தெருவில் சாதிக் பாட்சாவின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அதே போல பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில், அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையை முடித்த பின் கலியபெருமாளை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே, அங்கு வருமான வரித்துறையினரும் வந்தனர். இரு துறைகளின் அதிகாரிகளும் அவரிடம் நீண்ட நேரம் விசாரித்தனர்.
இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே வருமான வரித்துறையினரின் இன்னொரு குழு சாதிக் பாட்சாவின் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றது.
அதே போல ராசாவின் உறவினர்கள் சிலரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications