30ம் தேதி அதிமுக பொதுக்குழு-செயற்குழுக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு
சென்னை: சென்னையில் வரும் 30ம் தேதி செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை ஜெயலலிதா எடுத்து அறிவிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3.45 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.