மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் உள்ளது சீமானின் விடுதலை-வைகோ
சென்னை: இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். இந்த நாளில், மனித உரிமைகளை மதிக்காத திமுக அரசு பிரயோகித்த தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என்று நிரூபித்துள்ளது சீமானின் விடுதலை என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க அரசு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்க குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது.
ஏற்கெனவே, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி புதுவை காங்கிரஸ் அரசால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததை கருத்தில் கொள்ளவில்லை.
சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க. அரசு கைது செய்தது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு அரசு சிறையில் அடைத்தது.
ஏற்கனவே ம.தி.மு.க.வின் கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் மீது 2009 ஆம் ஆண்டு திருப்பூரில் பேசியதற்காக சாதாரணச் சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. ஜாமீன் மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியரை அணுகிதேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் காவல்துறை அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நானே வாதாடினேன்.
நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
2009 மே 2ஆம் தேதி சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனங்களை வழிமறித்த ம. தி.மு.க., மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய புகார் மனுவின்பேரில் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி உள்துறை அமைச்சகம் அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
நேற்றைய தினம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.
இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். தமிழகத்தில் மனித உரிமைகளை அதிகாரக் கரங்களால் பறிக்க நினைக்கும் அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications