தமிழக தேர்தலில் பிரிண்டர் இணைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம்-தேர்தல் ஆணையம் ஆலோசனை

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர நடைமுறைக்கு சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே நிலவி வரும் சந்தேகங்களை நீக்கி குறைகளைப் போக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும், வெளிப்படையான முறையில் நடைமுறைகளை அமல்படுத்தவும் நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்புக்கு வருகிற 23ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து அதை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று பாஜக, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளன.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரிண்டர்களைப் பொருத்தி, அதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியக் கூடிய நடைமுறையை வருகிற தமிழக மற்றும் கேரள சட்டசபைத் தேர்தலில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார் குரேஷி.












Click it and Unblock the Notifications