அமெரிக்க தீவை வாங்க திட்டமிட்டிருந்த சாமியார் நித்தியானந்தா
நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்து சிக்கிய நித்தியானந்தா மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் செய்த லீலைகள் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அவர் மீது பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் கற்பழிப்புப் புகார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலெஸ் அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கு பிரமாண்ட ஆசிரமம் அமைக்க நித்தியானந்தா முயற்சித்தது தெரிய வந்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் அமெரிக்காவில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் வைத்துள்ளார். அதே பாணியில் தானும் அங்கு ஆசிரமம் அமைக்க முயன்றுள்ளார் நித்தியானந்தா. ஆனால் அதற்குள் ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி கைதாகி விட்டார்.
நித்தியானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.