நீதிபதி ரகுபதியை ராஜா மிரட்டியது கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குத் தெரியும்-எச்.எல்.கோகலே

ரகுபதியை ராஜா மிரட்டியதாக கூறப்படுவது குறித்து தனக்கு கோலேவிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று முன்னதாக கூறியிருந்தார் கே.ஜி.பாலகிருஷ்ணன். ஆனால் தான் தெளிவாக அதுகுறித்து குறிப்பிட்டிருந்ததாக கோகலே கூறியிருப்பதால் பாலகிருஷ்ணன் பொய் சொல்லியுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரகுபதி நீதிபதியாக இருந்தபோது ராஜாவுக்கு வேண்டியவருக்கு சாதகமாக ஜாமீன் வழங்குவது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் ரகுபதியை சந்தித்ததாகவும், அப்போது ராஜா தொலைபேசியில் நீதிபதியுடன் பேச முயன்றதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் வழக்கில் தலையிடுவதாக குற்றம் சாட்டினார் நீதிபதி ரகுபதி இருப்பினும் அவர் ராஜாவின் பெயரை அப்போது சொல்லவில்லை. ஆனால் அப்போதைய தலைமை நீதிபதி கோகலேவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக விரிவாக தெரிவித்து ஒரு கடிதம் கொடுத்திருந்தார்.
இந்தக் கடித விவரம் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இதுகுறித்து ரகுபதி கூறுகையில், தான் கோகலேவை நேரில் சந்தித்து புகார் கடிதத்தைக் கொடுத்தபோது அதை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ஆனால் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூற்றை மறுப்பது போல தற்போது கோகலே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை படித்த பின்னர் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன். அதில் ராஜாவின் பெயரையும் நான் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். இப்படி இருக்கையில், நான் ராஜாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது வருத்தம் தருகிறது, அது தவறான தகவல்.
நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை மறைக்க நான் முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் சற்றும் உண்மை இல்லை.
நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அனுப்பிய அறிக்கையில் ராஜாவின் பெயர் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ரகுபதி எனக்கு அனுப்பிய கடிதத்தின் 2வது பாராவில் ராஜாவின் பெயரை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தையும் நான் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறியுள்ளார் கோகலே.
கோகலேவின் இந்த விளக்கத்தால் கே.ஜி.பாலகிருஷ்ணனின் பேச்சு குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications