நீதிபதி ரகுபதியை ராஜா மிரட்டியது கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குத் தெரியும்-எச்.எல்.கோகலே

ரகுபதியை ராஜா மிரட்டியதாக கூறப்படுவது குறித்து தனக்கு கோலேவிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று முன்னதாக கூறியிருந்தார் கே.ஜி.பாலகிருஷ்ணன். ஆனால் தான் தெளிவாக அதுகுறித்து குறிப்பிட்டிருந்ததாக கோகலே கூறியிருப்பதால் பாலகிருஷ்ணன் பொய் சொல்லியுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரகுபதி நீதிபதியாக இருந்தபோது ராஜாவுக்கு வேண்டியவருக்கு சாதகமாக ஜாமீன் வழங்குவது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் ரகுபதியை சந்தித்ததாகவும், அப்போது ராஜா தொலைபேசியில் நீதிபதியுடன் பேச முயன்றதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் வழக்கில் தலையிடுவதாக குற்றம் சாட்டினார் நீதிபதி ரகுபதி இருப்பினும் அவர் ராஜாவின் பெயரை அப்போது சொல்லவில்லை. ஆனால் அப்போதைய தலைமை நீதிபதி கோகலேவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக விரிவாக தெரிவித்து ஒரு கடிதம் கொடுத்திருந்தார்.
இந்தக் கடித விவரம் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இதுகுறித்து ரகுபதி கூறுகையில், தான் கோகலேவை நேரில் சந்தித்து புகார் கடிதத்தைக் கொடுத்தபோது அதை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ஆனால் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூற்றை மறுப்பது போல தற்போது கோகலே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை படித்த பின்னர் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன். அதில் ராஜாவின் பெயரையும் நான் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். இப்படி இருக்கையில், நான் ராஜாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது வருத்தம் தருகிறது, அது தவறான தகவல்.
நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை மறைக்க நான் முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் சற்றும் உண்மை இல்லை.
நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அனுப்பிய அறிக்கையில் ராஜாவின் பெயர் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ரகுபதி எனக்கு அனுப்பிய கடிதத்தின் 2வது பாராவில் ராஜாவின் பெயரை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தையும் நான் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறியுள்ளார் கோகலே.
கோகலேவின் இந்த விளக்கத்தால் கே.ஜி.பாலகிருஷ்ணனின் பேச்சு குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications