ஆதர்ஷ் ஊழலில் இருந்து யாரும் தப்ப முடியாது: அந்தோணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்மை ஆதர்ஷ் ஊழலில் ஈடுபட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது.
எப்பொழுதெல்லாம் குற்றச்சாட்டுகள் நிரூபி்க்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் என்னவாக இருந்தாலும், ஆயுதப்படையும், அரசும் நிச்சயமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. வேறு யாரும் இது போன்று தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை. ஆயுதப்படை மட்டுமே தீவிர நடவடிக்கை எடுக்கிறது.
ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் கொலபா நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி கேட்டபோது இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதை தீர்த்து வைப்பது ராணுவத்தின் பொறுப்பு என்றார்.












Click it and Unblock the Notifications