சொத்து குவிப்பு வழக்கு: ஜெவின் இன்னொரு இழுத்தடிப்பு முயற்சி தோல்வி!
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வழக்கம் போல வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை மொழி பெயர்த்தில் பிழைகள் இருபப்தாகவும், அவற்றை திருத்தும்வரை இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், தமிழும், ஆங்கிலமும் தெரிந்த நபரைக் கொண்டு தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடரலாம் என்றும், மொழிபெயர்ப்பு பிரச்சினைக்காக வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
மேலும்,ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கம் போல விசாரிக்கப்படலாம் என்றும் அது அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications