குஜராத் வேளாண் வெற்றியைப் பின்பற்ற கலாம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் மாநிலத்தில் வேளாண்துறை அடைந்துள்ள மிகப் பெரிய வளர்ச்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்றிப் பலனடைய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலம் விவசாயத் துறையில் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விட 3 மடங்கு அதிகமாகும்.
சமீபத்தில் நான் அகமதாபாத் ஐஐஎம் நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது குஜராத் விவசாய நிர்வாக மையத்தின் விஞ்ஞானிகள், இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கான காரணங்களை எனக்கு விளக்கிக் கூறினர். கடந்த சில வருடங்களில் அடைந்துள்ள வளர்ச்சி இது என்பதைக் கேள்விப்பட்டபோது விய்பாக இருந்தது. இந்த வெற்றி பார்முலாவை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடித்து பலன் அடையலாம் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications