சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் வெற்றி பெற ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கைச் சீற்றங்களால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக சந்திரபாபு நாயுடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரை இன்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, அதிமுக எம்பி செம்மலை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உண்ணாவிரத முகாமுக்கு வந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செம்மலை, ஜெயலலிதா அனுப்பியிருந்த வாழ்த்து்ச செய்தியைப் படித்தார்.












Click it and Unblock the Notifications