உ.பி.யில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் நசீராபாத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.
நசீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஷாபாத் ஷர்மா. அவர் பிளாஸ்டிக் ஷீட் போட்ட ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி காலையில் டீ போட்டுக் கொண்டிருக்கையில் சிலிண்டர் திடீர் என்று வெடித்தது. இதையடுத்து வீடு தீப்பிடித்து எறிந்தது. இதில் வீட்டில் இருந்த 6 பேர் உடல் கருகி இறந்ததாக டிஐஜி அஷோக் முத்தா ஜெயின் தெரிவித்தார்.
ஷர்மாவின் மனைவி, 23, 25 வயதான 2 மகள்கள், மகன் (22) மற்றும் 7, 8 வயதான 2 பேரக்குழந்தைகள் இந்த விபத்தில் இறந்தவர்கள் ஆவர்.
விபத்து நடந்தபோது ஷர்மாவும், அவரது இன்னொரு மகளும் வீட்டில் இல்லை. ஷர்மாவின் வீடு தீப்பிடித்து எரிவதைப் பார்த்து தீயை அணைக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான கோபாலுக்கு தீக்காயம் ஏற்பட்டது என்று டிஐஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications