மலேசியா-சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 22 பேர் பலி
கோலாலம்பூர்: மலேசியாவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 22 பேர் உயிரிழந்தனர்.
கேமரூன் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. விபத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சுவதாக தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமினுதீன் அப்துல் ரஹீம் தெரிவித்தார். விபத்து நடந்த இடம் மத்திய மலேசியாவில், பெரக் மாகாணத்தில் உள்ளது.
விபத்தில் சிக்கிய 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. பலி எண்ணிக்கை இன்னும் இறுதியாகவில்லை.
இருப்பினும் விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என விபத்து நடந்த பகுதி வரும் பெரக் மாகாண காவல்துறை தலைவர் ஜகாரியா யூசப் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் பயணித்ததாக தெரிகிறது. எனவே இறந்த அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications