ஆந்திர விவசாயிகளை வைத்து பாலிட்டிக்ஸ்-ஜெகன் மோகனும் உண்ணாவிரதம்

முன்னாள் கடப்பா எம்.பியான ஜெகன் மோகன் ரெட்டிக்கு இன்று 37வது பிறந்த நாள். இதையொட்டி தனது அரசியல் வாழ்க்கையை முறைப்படி ஒரு போராட்டத்துடன் தொடங்கியுள்ளார் ஜெகன் மோகன்.இதுதான் அவர், அவரது தந்தை இறந்த பின்னர் மேற்கொள்ளும் முதல் அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்னூல் மாவட்டம் நந்தியாலிலிருந்து விஜயவாடாவுக்கு வந்து சேர்ந்தார் ஜெகன் மோகன். பின்னர் அங்குள்ள கனக துர்க்கை கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்டார்.
அதன் பின்னர் கிருஷ்ணா நதிக்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குச் சென்று அங்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அவருக்கு பல்வேறு எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், திரைப்பட நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் திரண்டு வந்து ஜெகன் மோகனுக்கு ஆதரவு கொடுத்தனர். அதேபோல குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜெகன் மோகனின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக மாநில அரசின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார் ஜெகன் மோகன்.












Click it and Unblock the Notifications