வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின் காட்டம்
நெல்லை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதா ஊழல் பற்றிப் பேசத் தகுதியில்லாதவர் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை மாவட்டம் பாளை ஜவஹர் திடலில் திமுக அரசின் சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
தி்முக ஆட்சியில் திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றி வந்துள்ளோம். இந்த ஆட்சியை களங்கப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சி மீது எந்த குற்றசாட்டையும் ஆதராத்துடன் கூற முடியாததால் 2ஜி பெக்ட்ரம் ஓதுக்கீட்டை கையில் எடுத்துள்ளார். ராசா அமைச்சராக பொருப்பேற்ற பிறகு தான் இந்த ஊழல் நடத்ததாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார். இது தவறு. இது தொடர்பாக மத்திய தலைமை அதிகாரியின் தணிக்கை அறிக்கையில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என கூறப்பட்டுள்ளது.
இதில் எந்த ஆதாரமோ, புள்ளி விபரமோஇல்லை. அலை ஓதுக்கீட்டில் 2002ல் இருந்து 2010 வரை அரசுக்கு ரூ.77,983 கோடி கிடைத்துள்ளது. இதைதான் ஊழல் என்று பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் 2006ம் ஆண்டில் இருந்து பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications