ஸ்பெக்ட்ரம் வழக்கு-ராஜா, ராடியாவை மீண்டும் விசாரிக்க சிபிஐ திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு முறை விசாரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜாவையும், நீரா ராடியாவையும் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது சிபிஐ.
மேலும், இந்த வழக்கில் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மீது அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
ராஜா கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி நேரமும், பின்னர் சனிக்கிழமை 7 மணி நேரமும் இரண்டு தவணையாக விசாரிக்கப்பட்டார். அதேபோல நீரா ராடியாவையும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளது சிபிஐ.
இந்த நிலையில் இருவரையும் மீண்டும் விசாரிக்கத் தயாராகி வருகிறது சிபிஐ.












Click it and Unblock the Notifications