கடும் பனி: 70 விமானங்கள், 55 ரயில்கள் ரத்து!
டெல்லி: கடுமையான பனி மூட்டம் காரணமாக 70 விமானங்கள் டெல்லியில் ரத்து செய்யப்பட்டன. 55 ரயில்களும் நிறுத்தப்பட்டன.
டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது. டெல்லியின் விமான ஓடு பாதையில் பனி மூட்டம் இருப்பதால் விமானங்கள் புறப்படவோ இறங்கவோ முடியவில்லை.
நேற்று 100-க்கும் அதிகமான விமானங்கள் மூடுபனியால் பாதிப்பு அடைந்தன. நேற்று 14 சர்வதேச விமானங்கள் உள்பட 40 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2-வது நாளாக இன்றும் டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதலே டெல்லி விமான நிலையம் பனி சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் டெல்லி வந்து போகும் 70-க்கும் அதிகமான விமானங்கள் பாதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வந்த 23 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லியிலிருந்து புறப்படும் / வந்து சேரும் ரயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications