கிருஷ்ணகிரி: லாரி-வேன் மோதலில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே இன்று அதிகாலை வேனும் லாரியும் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.

போத்தாபுரம் அருகே பைபாஸ் சாலை மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்தது.

கிரானைட் கல் ஏற்றிச் சென்ற லாரி மீது பெங்களூரில் இருந்து வந்த சுற்றுலா வேன் மோதியதில் வேன் டிரைவர் பிரகாஷ் (45), ஜெயராம ரெட்டி (46), அவரது மகன் பிரித்திவி ரெட்டி (17), அருண் (23), பாக்யா (40), சர்மிளா (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ஜெயராம ரெட்டியின் மனைவி காயத்திரி, மகன் கிஷோர், சுதா, அலெக்ஸ், வினய் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் காயத்திரி, சுதா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேகமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாற்று ப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான அருண், பாக்யா, சர்மிளா ஆகியோர் ஜெயராம ரெட்டியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+