ரேசன் கடைகளில் பொங்கல் பை வழங்குவதைக் கண்காணிக்க குழு!
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச பொருள்கள் அடங்கிய பைகளை மக்களுக்கு சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு சர்க்கரை பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அடங்கிய இலவச பை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் அரிசி, வெல்லம் தலா அரை கிலோ, மற்றும் பாசிபருப்பு, ஏலக்காய், திராட்சை, முந்திரிபருப்பு ஆகியவை இருக்கும்.
இவை மறு சுழற்சி செய்யக்கூடிய உயர்ரக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் பை வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி 1-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லாவரத்தில் இலவச சர்க்கரை பொங்கல் பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 1 கோடியே 94 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
இதே மேடையில் பொங்கலுக்கான இலவச வேட்டி- சேலை விநியோகத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 கோடியே 17 லட்சம் பேர் இலவச வேட்டி- சேலை பெறுகிறார்கள்.
இலவச பொங்கல் பை வினியோகம் தவறு இல்லாமல் நடைபெறுவதற்காக, மாவட்டந்தோறும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவு இணைப் பதிவாளர், மாவட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பொருட்கள் வினியோகத்தை கண்காணிப்பார்கள். கூட்டுறவு கடைகள், நுகர்பொருள் வாணிப கழக கடைகள் உள்பட அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று திடீர் சோதனை நடத்தி பொங்கல் பைகள் குறித்து ஆய்வு நடத்துவார்கள்.
பொங்கல் பைகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் முறைப்படி விநியோகம் செய்யப்பட வேண்டும். சிறிய தவறு கூட நடைபெறாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications