கதறும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்.. உணவு – மருந்து சப்ளை நிறுத்தம்! கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்தநாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களின் சப்ளையை அந்த நாட்டு அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நம் நாட்டின் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. நம்முடைய இடத்தை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கூட அங்குள்ள மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாகிஸ்தான் அரசு நடத்தி வருகிறது.

pakistan protest pok

புரியும்படி கூற வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மேம்படுத்த அந்த நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்த பகுதியை புறக்கணித்து வருகிறார். சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது இந்த போராட்டம் தீவிரமாகி உள்ளது. அரசியல் உரிமைகள், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக உரிமைகளை பெறும் வகையில் போராட்டம் தொடங்கி உள்ளது. குறிப்பாக காஷ்மீரில் இருந்த வந்த அகதிகளுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பாகிஸ்தான் தனக்கு சாதகமான அரசுகளை அப்பகுதியில் அமைப்பதாக கூறப்படுகிறது. இதனை அங்குள்ள மக்கள் எதிர்த்து வருகின்றனர். ஜேஏஏசி (Joint Awami Action Commitee) சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 58 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக ஜேஏஏசி அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முசாஃபராபாத், பூஞ்ச், ராவலகோட், பாக் மற்றும் நீலம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் புதிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் , மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதனால் கள்ளச்சந்தையில் பொதுமக்கள் உணவு, மருந்துகள், பெட்ரோல், டீசலை அதிக விலை கொடுத்து வங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பொருட்களின் விலைகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மக்கள் அண்டை மாநிலமான கைபர் பக்துன்க்வா மற்றும் ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களுக்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்கி வருகின்றனர். ஆனால், அவர்கள் அந்தப் பொருட்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை . வழியில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறை அதிகாரிகள் மக்களைதடுத்து நிறுத்தி, அவர்கள் வாங்கி வரும் உணவு மற்றும் மருந்துகளை பிடுங்கி வைத்து கொள்கின்றனர்.

அதேபோல், வணிக ரீதியாக உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளும் ஆசாத் பட்டன், பாக்வாரி போன்ற சோதனை சாவடிகளில் பஞ்சாப் காவல்துறையினரால் நாட்கணக்கில் தடுத்து நிறுத்தப்படுவதால் உள்ளே இருக்கும் பொருட்கள் அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூறுகையில், ''பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களின் சப்ளையை தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு வேண்டுமென்றே இந்த தடையை ஏற்படுத்தி உள்ளது'' என்றார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை முடக்க அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+