ரோம் நகர கிரேக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு பார்சல்!

Subscribe to Oneindia Tamil

ரோம்: சுவிட்சர்லாந்து, சிலி தூதரகங்களைத் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள கிரேக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு பார்சல் வந்துள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடந்த 23ம் தேதி பார்சல் குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். அதே போல சிலி நாட்டுத் தூதரகத்துக்கும் பார்சல் குண்டு வந்தது.

இந் நிலையில் நேற்று ரோம் நகரில் உள்ள கிரேக்க நாட்டு தூதரகத்துக்கும் பார்சல் வெடிகுண்டு அனுப்பப்பட்டது. அலுவலகத்துக்கு வந்த தபால்களை ஊழியர்கள் பிரித்து கொண்டிருந்தபோது ஒரு பார்சலில் சிடி பிளேயர் இருந்தது. அதனுடன் வெடிகுண்டு இணைக்கப்பட்டிருந்தது.

அந்த பார்சலை பிரித்தபோது குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து தூதரகத்தை விட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டு பார்சலை அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் அதை வெடிக்கச் செய்தனர்.

இந்த பார்சல் கடந்த வெள்ளிக்கிழமையே கிரேக்க தூதரக அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. அன்று கிருஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் யாரும் அதை பிரிக்கவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து ரோம் நகரில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களிலும் பார்சல்சளை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு பார்சல்களை நாங்கள் தான் அனுப்பினோம் என்று Anarchist Federation (FAI) என்ற அடையாளம் தெரியாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+