ஆம்பூர் சாலை விபத்தில் கைதி, 3 போலீஸார் பலி-3 பேர் காயம்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் கைதியுடன் சென்ற போலீஸ் வேன் சிக்கியது. இதில் கைதியும், 3 போலீஸாரும் பலியானார்கள். 2 கைதிகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
கோவை மத்திய சிறையிலிருந்து 3 கைதிகளுடன் நான்கு போலீஸார் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் வந்த வேன் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே வந்தபோது ஒரு பாலத்தின் சுவர் மீது பலமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.
இதில் ஒரு கைதியும், 3 போலீஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரரும், 2 கைதிகளும் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயரிழந்த போலீஸ்கார்கள் குமரவேல், தேவகுமார், ஞானசேகரன் என்று தெரிய வந்துள்ளது. கைதியின் பெயர் லியாகத் அலி.
காயமடைந்தவர்களில் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கைதிகள். கருணாகரன் போலீஸ்காரர் ஆவார்.












Click it and Unblock the Notifications