இளங்கோவனின் கருத்தெல்லாம் காங்கிரஸ் கருத்தே அல்ல-சித்தன் எம்.பி.
பழனி: அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கருத்து தெரிவித்து வரும் கருத்தை, காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்.பி. சித்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பழனி மலைக் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
அப்போது திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யா சித்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழனி - திண்டுக்கல் அகலரயில் பாதை பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பழனி நகராட்சிக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ரூ. 20 லட்சம் பயன்படுத்தாமல் விட்டதால், நத்தம் தொகுதியில் இரு பணிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் பதில், அவரது சொந்த கருத்தாகும். ஒருவரது கருத்து மட்டுமே கட்சியின் மொத்த கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications