கூட்டணிப் பேச்சு விறுவிறுப்பாகிறது-அதிமுக கூட்டணிக்கு வருமா பாமக, தேமுதிக?
சென்னை: கூட்டணி குறித்து சில நாட்களில் அறிவிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாகியுள்ளது.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை தற்போது அதில் காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான் பெரிய கட்சிகளாக உள்ளன. புதிய கட்சிகள் ஏதேனும் அங்கு வருகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் பாமக வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேசமயம், தற்போது அனைவரின் கவனமும் ஜெயலலிதா அமைக்கப் போகும் கூட்டணி குறித்துதான் உள்ளது.
அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இக்கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை உள்ளன. புதிதாக சில கட்சிகள் வரும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
குறிப்பாக தேமுதிக அதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை கூட ஜெயலலிதா ஏற்கனவே முடித்து விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந் நிலையில் தற்போது பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரப் போவதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தேமுதிக இதுவரை கூட்டணி எதிலும் சேராமலேயே போட்டியிட்டு தனது பலத்தை வலுவாக்கி வருகிறது. பாமகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணி என்பதை கொள்கையாகவே வைத்துள்ளது.
வடிவேலு பாணியில், 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது பாமகவின் கூட்டணி அரசியல்.
தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர். இதனால் இது இயல்பான கூட்டணியாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ஒரு கூட்டணி வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், அடிமட்டத் தொண்டர்கள் மட்டத்திலும் இயல்பான, தோழமை உணர்வு இருக்க வேண்டும். அது அதிமுக, தேமுதிக மத்தியில் நிலவுவதாகவே தெரிகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications