For Daily Alerts
Just In
கேரளாவில் ஒரே நாளில் ரூ.35 கோடி மது விற்பனை: டிசம்பரில் மட்டும் ரூ. 600 கோடி விற்பனை
திருவனந்தபுரம்: புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் கேரளாவில் ரூ.35 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
கேரளாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம், தீபாவளி பண்டிகை தினங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று மட்டும் ரூ.35 கோடிக்கு வெளிநாட்டு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.30 கோடிக்கு விற்பனையானது. டிசம்பர் மாதம் மட்டும கேரளாவில் ரூ.600 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
இத்துடன் பார்கள், ராணுவ கேன்டீன்களில் விற்பனையான தொகைகளை சேர்த்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கும்.
Comments
English summary
Kerala is known for liquor consumption. Year by year Kerala is breaking its own records in liquor sales. Rs. 35 crore worth liquor was sold on December 31 alone. December sales has touched Rs. 600 crore.
Story first published: Sunday, January 2, 2011, 14:16 [IST]