காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகளே-ஹூரியத் தலைவர் அப்துல் கனி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் சிலரைக் கொன்றது ராணுவம் அல்ல, மாறாக தீவிரிவாதிகளே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார் முக்கிய பிரிவினைவாத தலைவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவருமான அப்துல் கனி பட்.
அப்துல் கனி லோனே, மீர்வைஸ் மெளலவி பரூக் ஆகிய முக்கிய பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகள்தான், ராணுவம் அல்ல என்று பட் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் மூத்த தலைவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பட் கூறுகையில், ஒருவரைக் கொல்வது என்பது மிகவும் கொடுமையானது. ஒரு கொலைக்கு எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது. அதிலும் அப்பாவிகளைக் கொல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அப்துல் ஹத்வானி, மெளலானா முகம்மது பரூக், அப்துல் கனி லோனே ஆகியோர் ராணுவத்தால் கொல்லப்படவில்லை, நமது மக்களே அவர்களைக் கொன்றுள்ளனர். இது எனக்குத் தெரியும்.
காஷ்மீரில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவம் பரிசுத்தமானது என்று நான் கூற மாட்டேன். அவர்கள் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால் நமது மக்களே, நம்மில் சிலரைக் கொல்வது ஏற்க முடியாது. அதைத்தான் நான் கூற வருகிறேன். உண்மையைச் சொல்வதற்காக நான் கூட கொல்லப்படக் கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நான் அஞ்சவில்லை.
எனது சகோதரரையும் கூட எமது மக்களில் சிலரேக் கொன்றனர். இதுதான் உண்மை. இதைச் சொல்ல நான் பயப்படவில்லை. இதற்காக என்னைக் கொன்றால் அதையும் நான் வரவேற்பேன் என்றார் அவர்.
மீர்வைஸ் பரூக் 1991ம் ஆண்டும், லோனே 2002ம் ஆண்டிலும் கொல்லப்பட்டனர். இருவரும் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கடுமையாக முயன்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications