மக்களுக்கு வழங்கும் பொங்கல் பையில் திமுக சின்னம் எதற்கு?-சீமான் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களில் திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பைகளில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர்.

அந்தப் பொருட்களை தமிழக அரசு தான் வழங்குகிறது. ஆனால் அதில் உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர். அரசு சார்பில் அரசின் நிதியில் வழங்கப்படும் பொருட்களில் திருவள்ளுவர் படம் இருந்தால் போதுமானது, கருணாநிதியின் கட்சி சின்னம் எதற்கு?

இதன் மூலம் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க தமிழ் மக்களை நிர்ப்பந்தப்படுத்துவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

பொங்கல் பையில் உதயசூரியன் சின்னம் மட்டுமல்ல, முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கருணாநிதியின் ஆட்சியில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகின்றது. அவரது புகைப்படம் இடம் பெறுகிறது.

பேருந்தில் இருந்து, ரேஷன் கடையில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள் வரை அனைத்திலும் கருணாநிதி பெயரும் புகைப்படமும் தான். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+